• Sep 20 2024

பிரியாணிமேன் அபிஷேக் ரபியை கைது செய்தது ஏன்? சென்னை போலீஸ் விளக்கம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல யூடியூபர் பிரியாணி மேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்து சென்னை போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:

நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்  தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொடுத்த புகாரில், தான் தினந்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் அபிஷேக் ரபி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி புகாரின் அடிப்படையில், தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலையத்தில்  தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்  உள்ளிட்ட சில சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் யூடியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்த எதிரி அபிஷேக் ரபி, வ/29 என்பவரை நேற்று (29.07.2024) செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் எதிரி அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறு சென்னை போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Advertisement

Advertisement