• May 20 2024

பசி தாங்க முடியாமல் போண்டா, பஜ்ஜி ஆர்டர் செய்து நான் சாப்பிடுவேன்- ஜோதிகா சொன்ன ஷுட்டிங் ஸ்பாட் விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஜோதிகா. இதனைத் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர்.

தொடர்ந்து முகவரி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, தெனாலி என்று தொடர் வெற்றி படங்களில் நடித்து வந்தார். இவரைப் போல 2கே கிட்சின் பேவரைட் நடிகையாக இருந்தவர் தான் சிம்ரன். இவர்கள் இருவரும் அந்தக் காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தனர்.

ஒல்லியான தோற்றத்தில், நடன புயலாக இருந்த சிம்ரனும், பப்ளியாக இருந்த ஜோதிகாவும் அப்போது முன்னணி நடிகைகளாக இருந்தனர். மாறி மாறி பல ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ஜோதிகா பேசிய த்ரோ பேக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பகிரப்பட்டு கொண்டிருக்கிறது.மாயாவி படத்தில் சூர்யா, சிம்ரன் ரசிகையாக நடித்திருப்பார், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ஜோதிகா சுவாரஸ்யமாக பதில் அளித்துள்ளார் .இது பற்றி ஜோதிகா கூறுகையில் என் அம்மா எப்பவுமே சிம்ரனை புகழ்வார்,

பார்ப்பதற்கு எவ்வளவு ஸ்லிம்மாக இருக்காங்க.. அவங்க டான்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு என்று கூறிக் கொண்டே இருப்பார். சூர்யாவுக்கும் இந்த விஷயம் தெரியும். ஆனால் நான் சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் 6 மணி ஆனதும், பசி தாங்க முடியாமல் போண்டா, பஜ்ஜி ஆர்டர் செய்து நான் சாப்பிடுவேன் என்று ஜோதிகா சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement