• May 20 2024

'மகள் இல்லை என்றால் என்ன அம்மா அட்ஜெஸ்ட் செய்யலாம்'- பரபரப்பான பேட்டியளித்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீநிதி. இவர் ஆதித்யா சேனலில் ஒரு தொடரில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தறி என்னும் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதில் இவர் சிறப்பாக நடித்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய செந்தூரப்பூவே சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.இந்த தொடரின் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. சமீபத்தில் தான் இந்த தொடர் முடிவடைந்தது.

இந்த நிலையில் பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருகின்றார். இது தவிர சயபென்சில்’ என்ற மலையாள படத்திலும், ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற தமிழ் படத்திலும் நடிதது வந்தார். ஆனால் சில காரணங்களால் இவ்விரு படங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. தற்போது இவர் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், ’நான் சிறுவயதிலேயே இந்த அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பிரச்சினையை சந்தித்து உள்ளேன்' என்றார்.

மேலும், அவர் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு படத்தில், நடிக்க இருந்தபோது அந்த படத்தின் பிரபலம் அட்ஜஸ்ட் பண்ணுவீங்களா? என்று கேட்டார்கள்.தனக்கு அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் என்னவென்று புரியவில்லை என்பதால், மகள் அட்ஜெஸ்ட் பண்ணவில்லை என்றால் கூட பரவாயில்லை, அம்மா அட்ஜெஸ்ட் செய்தால் போதும் என்று கூறியது தன்னுடைய அம்மாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement