• May 05 2024

"சும்மா மேல கொண்டு போய் ஏத்தி வைக்க நாங்க ஒன்றும் முட்டாள் இல்லை"... அஜித் பற்றிப் பேசிய மனோபாலா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மனோபாலா அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் மரணமடைந்துள்ளார். இதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். ஆனால் அஜித் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் மனோபாலா சமீபத்தில் அஜித் குமார் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய விடயமானது தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் அவர் கூறுகையில் "இந்த பொசிஷனுக்கு வர அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியாது. சும்மா மேல கொண்டு போய் ஏத்தி வைக்க நாங்க ஒன்றும் முட்டாள் இல்லை. அவன் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான்" என்றார்.


மேலும் "அந்த பையன் பட்ட வேதனையும், கஷ்டமும் ஊர், உலகத்துல எந்த நடிகனுமே பட்டது இல்ல. அவ்வளவு ஆபரேஷன், நடக்கவே முடியாது. நடக்கிறதே சாத்தியம் இல்லை. ஆனால் ஆக்ஷன், டான்ஸ் காட்சிகள் என எல்லாமே அஜித் பண்றார். பார்த்தால் குளு குளுனு இருக்கார். இதெல்லாம் எப்படி சாத்தியம். தன்னைத் தானே வளர்த்து அந்த பொசிஷனுக்கு வந்திருக்கிறார்" எனவும் அஜித் பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் மனோபாலா.


அத்தோடு "அஜித் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த மனோபாலாவுக்கு தளபதி விஜய் என்றாலும் மிகவும் பிடிக்கும். விஜய் படம் என்றால் ஒரேயொரு ஷாட்டில் நடிக்க கூப்பிட்டால் கூடி ஓடி வந்துவிடுவேன்" எனவும் கூறியுள்ளார் மனோபாலா. 

Advertisement

Advertisement

Advertisement