• Apr 28 2024

அந்தரத்தில் தொங்கும் விஜய்யின் அப்பா- ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.இவர் நடிகர் விஜய்யின் தந்தையுமான இவர் சமீப காலமாக ‘யார் இந்த எஸ்.ஏ.சி’.என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ரசிகர்களிடத்தே பகிர்ந்து வருகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் ‘நான் கடவுள் இல்லை’ படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இந்தப்படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சண்டை பயிற்சி இயக்குநர் கனல் கண்ணன்.

மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் எஸ்.ஏ.சந்திரசேகர் பணியில் காட்டும் ஆர்வத்தை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சமுத்தரகனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement