• Apr 25 2024

இரவு முழுவதும் அவர விடாம பாத்துக்கிட்டே இருப்பேன் – நடிகை அதுல்யா ரவி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பால்வாடி காதல் என்னும் தமிழ் குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை அதுல்யா ரவி. இதன் மூலம், காதல் கண் கட்டுதே என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றார். பின்னர், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஏமாளி என்னும் திரைப்படத்தில் செம கவர்ச்சியான ரோலில் நடித்த இவர், அப்போது இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.. நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, ஏன் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

அதன் பிறகு சந்தனு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இளசுகளை கவரும் கதையில் நடித்திருந்தார். எனினும் தற்போது, எண்ணித் துணிக, வட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வரும் அதுல்யா ரவி, தற்போது தனது போட்டோஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவர் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் நான் விஜயின் தீவிரமான ரசிகை. இப்போ வரைக்கும் ஒரு நைட் ஃபுல்லா அவரது பழைய படங்களில் இருந்து இப்போதைய படம் வரை உள்ள பாடல்களை நான் பார்த்து ரசிப்பேன்.

என்னிடம் என் நண்பர்கள் எல்லாம் கேட்பார்கள் இப்படி பழைய பாடல்களைப் பாக்குறியே உனக்கு போரடிக்கலையான்னு. ஆனால் அது எனக்கு போர் அடிக்காது சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா காலகட்டத்தில் கூட தினமும் இரவு அதைத்தான் பார்ப்பேன் அவரது நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதனால் அவரது பிறந்தநாளுக்கு நான் சூப்பராக நடனம் ஆடி அந்த நடன வீடியோவை அவருக்கு சமர்ப்பிக்க ஆசைபடுகிறேன்” என அதுல்யா ரவி பேசியுள்ளார். அவர் இவ்வாறு பேசிய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement