• May 19 2024

"விஜய்யின் முகம் பூனை குடும்பத்தை சேர்ந்தது.." பிரபல இயக்குநர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாபெரும் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய படைப்புகள் ஆகவே பார்க்கப்படுகின்றது. அப்படிப்பட்ட சிறப்பினை பெற்றுள்ள பாலுமகேந்திராவிடம் சிஷ்யர்களாக பணியாற்றியவர்கள் தான் வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம் போன்ற சிலர்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் இயக்குநர் சீனுசாமி. இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல ஹிட் படங்களை இயக்கி மக்களுக்கு விருந்தளித்தார்.

அத்தோடு , இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன், இடம் பொருள் ஏவல். இந்த இரு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்காக நடத்தப்பட்ட பிரமோஷனில் இயக்குநுர் சீனு ராமசாமி நடிகர் விஜய்யை பற்றி பேசியிருக்கிறார். அது என்னவென்றால் அவர் தனது குருநாதரான பாலுமகேந்திரா உடன் காரில் சென்றிருக்கிறார். அப்போது மிகவும் பிரபலமான நடிகராக வளர்ந்து வந்த விஜயின் வீட்டின் முன்னால் ரசிகர்கள் கூட்டமாக விஜய்யின் முன்நின்று இருப்பதை பார்த்துள்ளார்கள்.

அதன்பின் விஜய்யின் புகைப்படத்தை பார்த்து பாலுமகேந்திரா சீனு ராமசாமியிடம் “இந்தப் பையனுக்கு ஏன் ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு வரவேற்பு தெரியுமாடா” என்று கேட்டிருக்கிறார். அதற்கு சீனுராமசாமி அவரின் படங்கள் வெற்றியடைவது தான் காரணம் எனக் கூறியிருக்கிறார். அதற்கு பாலு மகேந்திரா அவர்கள் இல்லை, விஜய்யின் முகம் பூனைகள் குடும்பத்தை சேர்ந்தது, இந்த மாதிரியான முக அமைப்பு உள்ளவர்கள் எப்போதும் அதிக கவனத்தை ஈர்பவர்களாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதாக சீனு ராமசாமி பேட்டியில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement