• May 08 2024

அர்ஜுன் செய்த செயல்-மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இவர் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

புகழ் பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுன்.இவர் அதிகமாக சண்டைக் காட்சி திரைப்படங்களில் நடித்ததாலேயே இவருக்கு ஆக்சன் கிங் எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது. இவரது அதிரடி சண்டை காட்சியைப் பார்த்து ரசிப்பதற்கு தற்போது வரை மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

நடிப்பைத் தாண்டி திரைப்படம் இயக்குவது, தயாரிப்பது, கதை கூறுதல், மற்றும் பட விநியோகம் என ரொம்ப பிஸி ஆக உள்ளார் நம்ம ஆக்சன் கிங்.

இந்நிலையில் இவர் தற்போது தனது மகளை வைத்துப் புதிய படத்தை இயக்கி வருகின்றார். இதற்கான சூட்டிங் ஐதராபாத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அர்ஜுன் தற்போது நடித்து வருகின்ற "தீயவர் கொலை நடுங்க" என்ற படத்தின் மிகுதிப் படப்பிடிப்பிற்காக அவரை சென்னைக்கு வருமாறு படக்குழுவினர் அழைத்திருந்தனர்.

அனால் அர்ஜுன் "என்னால் சென்னைக்கு வர முடியாது, நீங்கள் வேண்டுமென்றால் ஐதராபாத் வாருங்கள்" என மறுத்துள்ளார்.

இதற்கு படக்குழுவினர் "ஒட்டுமொத்த குழுவையும் ஒரு சில காட்சிகளுக்காக ஐதராபாத் வர சொல்வது சரியாக இருக்காது, அதிகளவு பொருட் செலவு ஏற்படும்" எனக் கூறியுள்ளனர்.

எனினும் அர்ஜுன் சென்னை வர மறுத்துள்ளமையை அடுத்து படக்குழுவினர் வேறு வழியின்றி தற்போது ஐதராபாத் சென்றுள்ளனர்.இதற்கு அர்ஜுன் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது ஒரு சில காட்சிகளுக்காக பெரிய நடிகர்கள் கூட வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் அர்ஜுன் சென்னைக்கு வர மறுத்துள்ளது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.இதற்காக அர்ஜுனை கண்டித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement