• May 24 2025

விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் பட நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்த 73 வயதான நடிகை பெருமாயி (மூதாட்டி) இன்று மாரடைப்புக்கான காரணமாக உயிரிழந்தார். இவர் பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு என்ற தெலுங்கு சீரியலில் சிறப்பாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். அந்த வெற்றியுடன் அவர் பாரதிராஜாவின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதுகளில் இடம் பிடித்தார்.


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்தி பறவை, விஜயின் வில்லு உள்ளிட்ட படங்களில் 30க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த கதைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவரது திறமையான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது. 


இறுதியாக பசுபதி நடிப்பில் தண்டட்டி படத்தில் நடித்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக சமீப காலமாக திரைப்படங்களில் கலந்து கொள்ளவில்லை. இன்று அவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். மேலும் இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இவரது உடல் தற்போது அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement