• Sep 19 2024

ரித்திகாவைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகைக்கு நாளை திருமணம்! வாவ் மாப்பிள்ளை யார் தெரியுமா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பிரபலங்கள் பலரும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் அண்மையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையான ரித்திகா திருமணத்தில் இணைந்து கொண்டார்.

அந்த வகையில் தற்பொழுது பிரபல ஷு தமிழ் நடிகையான தேஜஸ்வினிக்கு நாளைய தினம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தேஜஸ்வினி வித்யா நம்பர் 1 என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


இதில் கதாநாயகனாக புவி என்பவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தேஜஸ்வினிக்கும் நடிகர் அமர்தீப் செளத்ரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் நாளை திருமணம் நடக்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தேஜஸ்வினி இதற்கு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்னும் சீரியலில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement