• Apr 28 2024

காதலர் விக்னேஷ்சிவனை கரம்பிடித்தார் நயன்தாரா-இனிதே நிறைவு பெற்ற திருமணம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தப் படம் ஹிட்டானதை தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என சொல்லப்பட்டது.இருவரும் ஒரே வாரத்தில் இரண்டு முறை திருப்பதிக்கு சென்றனர்.

இதையடுத்து ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் தான் திருமணம், அதற்காகதான் திருப்பதியில் முகாமிட்டுள்ளனர் என கூறப்படுகின்றது. ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்திற்கு பிரபலங்கள் அதிகம் வருவார்கள் என்பதாலும் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் திருப்பதி தேவஸ்தானம் திருமணத்திற்கு அனுமதி மறுத்தது.

எனினும் இதையடுத்து சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் கடற்கரை ஓரம் உள்ள அரங்கில் திருமணத்தை நடத்த விக்கியும் நயனும் முடிவு செய்தார்கள். அவர்களின் திருமண அழைப்பிதழும் இணையத்தில் கசிந்து பெரும் வைரலானது. முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்தனர் விக்கியும் நயன்தாராவும்.

இந்நிலையில் இன்று காலை 4.30 - 6 மணிக்கு கலக்கலாக திருமணம் நடந்து முடிந்தது என்றும் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மந்திரங்கள் முழங்க விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவரான நயன்தாரா, 2011 ஆம் ஆண்டு இந்து மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கி நயன் திருமண விழா நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதால், ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் விக்கி நயன் மெஹந்தி, சங்கீத், திருமணம் என எந்த நிகழ்ச்சியின் போட்டோக்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement