• Apr 26 2024

அவர் எங்களை கண்டு கொள்ளாமல் போனதற்கு இது தான் காரணம்- உண்மையை உடைத்த விஜய்யின் அம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய் . இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்பத்தில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருவதோடு இப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியிருந்தது.

இதற்கு முதல் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படம் வெளியாகி 250 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதோடு விஜய்யின் பெற்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

விஜய் அவரது அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபா ஆகியோரை சண்டை காரணமாக பிரிந்து தான் இருந்து வருகிறார். அதை பலரும் விஜய்க்கு எதிராக விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.சொந்த அப்பா உடன் சண்டை என்பதை நிஜத்திலேயே படமாக எடுத்து வைத்திருக்கிறார் என வாரிசு படத்தை ஒரு சிலர் ட்ரோல் செய்தனர்.


வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் அப்பா- அம்மா இருவரையும் கண்டுகொள்ளவே இல்லை எனவும் ட்ரோல்கள் வந்தது. இது பற்றி விஜய்யின் அம்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.விஜய் ரசிகர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி அது. அவர்களை விஜய் திருப்திபடுத்தவேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். எங்களை கண்டுகொள்ளவில்லை என்கிற எண்ணம் எல்லாம் இல்லை என கூறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement