• Apr 28 2024

சமந்தா விவாகரத்துக்கு இதுதான் காரணம்- உண்மையை உடைத்த பிரபல பாடகி-ஷாக்கான ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு நிறைய பாடகர்கள் வந்துவிட்டார்கள். சிலரது குரலை மக்களால் மறக்கவே முடியாது.அப்படிபட்ட பாடகர்களில் ஒருவர் தான் சின்மயி.

ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ளார்.இவர் பாடிய எல்லா பாடல்களும் செம ஹிட், எத்தனை முறை இவரது பாடலை கேட்டாலும் சுகமாக இருக்கும்.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பாடி வரும் சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகாரும் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரகுமான் முதல் சமந்தா விவாகரத்து வரை அவர் பேசிய விசயங்கள்  பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 நடிகை சமந்தா விவாகரத்து பற்றி  அவர் கூறுகையில், திருமணத்திற்கு பிறகு சமந்தாவுக்கு உறுதுணையாக இருந்ததே கணவர் நாக சைதன்யாவின் குடும்பத்தினர் தான். ஆனால் கணவரை விட மனைவி அதிகமாக சம்பாதிக்கிறார் என்பது தான் பெரிய பிரச்சனை.



இதனால் குடும்பத்தில் வயிற்றெரிச்சல் ஏற்படும். எனினும் இதன் ஒரு காரணம் தான் சமந்தாவின் விவாகரத்துக்கு பெரிய புள்ளியாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சமந்தா வாழ்வில் கடந்ந்து வந்த பாதியில் தன்னம்பிக்கை, தையரிம் தான் அவர் இந்த இடத்தில் நிற்க காரணம் என்றும் விரையில் பல விருதுகள் வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு என்று கூறியுள்ளார் சின்மயி.

 


Advertisement

Advertisement

Advertisement