• Apr 28 2024

“எனது ஆசை இது தான்..” புகழிடம் உருக்கமாக கோரிக்கை வைத்த ஷகிலா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் ஷகிலா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றில் பிரபலங்களை பேட்டி எடுத்தும் வருகின்றார்.

இந்நிலையில் இவருக்கான பான்ஸ் மீற் ஒன்று பிரத்தியோக ஊடகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.அதில் இவரின் பான்ஸாக பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.அதில் புகழ் ,செப் தாமு என பலரும் அவருக்கு வீடியோ மூலம் வாழ்த்து கூறியிருந்தனர்.


அதில் புகழ் ... ஹாய் அம்மா எப்பிடி இருக்கிறீங்க...குக்வித்கோமாளி முடிந்ததும் உங்களை சரியா மிஸ் பண்ணுறேன்...உங்க பிள்ளை பார்க்காம ஏங்கிட்டு இருக்கின்றென் ...உங்களை எல்லாரும் சகி அம்மா என்று கூப்பிடுறாங்க..நான் உங்களை மிஸ் பண்ணுறேன்..ஹாப்பியா இருங்க..எனக்கு சூட் முடிந்ததும் உங்க பிள்ளை சீக்கிரம் வந்து மீட் பண்ணுறேன்..” என உருக்கமாக பேசி இருந்தார்.

இதைப்பற்றி பேசிய ஷகிலா...உண்மையிலே அவன் என்னை அம்மா என்று தான் சொல்லுவான் .புகழை பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக்கிட்டே போகலாம்.பெத்தா மட்டுமா பிள்ளை பெறாமலும் பிள்ளை என சொல்லிட்டே இருப்பான்.

ஆனால் புகழிற்கு இப்ப தான் கல்யாணம் ஆகி இருக்கு.அவன் எனக்கு ஒன்று செய்யனும்..அது என்னவென்றால் அவன் அழகான குழந்தையை பெற்று என்னை பாட்டி ஆக்கனும் என்று ஆசை என நெகிழ்ந்து கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement