• Feb 22 2025

"இது ஒரு ஏமாற்று வேலை" கங்குவா படத்தின் தோல்வி குறித்து நடிகர் ராதா ரவி கருத்து..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, தீஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'கங்குவா', பிரமாண்ட எதிர்பார்ப்புகளுடன் கடந்த 14ஆம் தேதி வெளியானது. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்த இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது, ஆனால் முதல் பாகமே திரைப்பெரும் தோல்வியை சந்தித்தது.படம் வெளியாகி பின்னர், சொதப்பலான திரைக்கதையும், பின்னணி இசையின் பங்களிப்பும் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. படம் வசூல் ரீதியிலும் தோல்வியடைந்ததால், இதற்கு திட்டமிட்டே சிலர் தடங்கள் போட்டதாக கூறப்பட்டது. கங்குவா ரூ.2000 கோடிகள் வசூலிக்கும் என முன்பு கூறப்பட்டாலும், படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.


இந்த சூழலில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராதா ரவி, கங்குவா குறித்தும், படக்குழுவினரின் முயற்சிகளையும் ஒரு பேட்டியில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.அவர் கூறியதாவது"நான் கங்குவா படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஆனால், தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என நினைக்கிறேன். தியேட்டரில் பார்த்தால்தான் சூர்யா மற்றும் படக்குழுவினர் உழைத்த அளவை உணர முடியும். ஆனால் உண்மையை சொல்வதெனில், தியேட்டரில் கூட்டமே இல்லை.படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ளார். நண்பர்களுக்காக நானே பல படங்களில் நடித்துள்ளேன். அண்ணனுக்காக தம்பி நடிக்க மாட்டானா? இதைத் தவிர, படக்குழுவினர் பாகுபலியாக இருக்கும் என கூறவில்லை. ஆனால், நீங்களாகவே அந்த அளவிற்கு எதிர்பார்த்தால் அதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்?சினிமா என்பது ஒரு சிறந்த புலி வேட்டை போன்றது. நான் குத்துவதைப்போல் குத்துவேன், நீ அழுவதைப்போல் அழவேண்டும். இதுதான் சினிமா எனக்கு தெரியும்," என்று குறிப்பிட்டார்.


ராதா ரவியின் பேச்சு ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகின் நிஜத்தை வெளிப்படுத்தியதாகவும், தைரியமாக தனது கருத்தை பகிர்ந்ததாகவும் சிலர் பாராட்டுகின்றனர். 

Advertisement

Advertisement