தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்- சங்கீதாவை விவாகரத்து செய்வது குறித்த தகவல்கள் பரவி வரும் நிலையில், சமீபத்தில் திருமண நிகழ்வில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் விஜய் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோ வெளியாகிய பின்னர் ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில்,த.வெ.க. நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அவர் அதன்போது, "சங்கீதாவை விவாகரத்து செய்யாமல் த்ரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு. கண்ணியமே இல்லாமல் தவெக தலைவர் விஜய் நடந்து கொள்கிறார். விஜய் என்ன தப்பு செய்தாலும் நாங்கள் முட்டுக் கொடுக்கிறோம்." என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து வெளியாகிய பின்னர் சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு விமர்சனங்கள் பரவின. சிலர் ரஞ்சனா நாச்சியாரின் கருத்தை உண்மையாகக் கருதினாலும், சிலர் அதனை மிகையாக்கம் என விமர்சித்துள்ளனர்.
Listen News!