தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகின்ற உணர்வு பூர்வமான படங்களை ரசிகர்கள் எப்போதுமே கொண்டாடுவார்கள். அந்த வகையில், நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கவுள்ளது.
இயக்குநர் தனுஷின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பவிஷ் , அனிகா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படமானது காதல் வாழ்க்கை மற்றும் உறவுகளின் நுட்பங்கள் என்பவற்றை சிறப்பாக பிரதிபலிக்கின்றது. மேலும், நடிகர் தனுஷ் இப்படம் குறித்து தற்பொழுது கதைத்த வீடியோ ரசிகர்களிடையே படம் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் படம் ஒரு பொதுவான காதல் கதையாக இல்லாது மனிதர்களின் உணர்வுகளை அவர்களுக்குள் நடக்கும் நுணுக்கமான சம்பவங்களை பேசும் ஒரு கதையாக அமைந்துள்ளது. இதனால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!