• Apr 28 2024

இவர்கள் காதல் திருமணம் என்பதே ஆச்சரியம் தான்- அசோக் செல்வன் ,கீர்த்தி பாண்டியன் திருமணம் குறித்து ஓபனாகப் பேசிய பிரபலம்

stella / 7 months ago

Advertisement

Listen News!


இயக்குநரும், நடிகருமான அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா என்கிற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். இதைத்தொடர்ந்து அன்பிற்கினியால் என்கிற படத்தில் அப்பா அருண்பாண்டியனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

கீர்த்தி பாண்டியன் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 


கிரிக்கெக் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த போது தான் கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் செப்டம்பர் 13ந் தேதி,திருமணம் செய்து கொண்டனர்.அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 இந்நிலையில், விமர்சகரான செய்யாறு பாலு இது குறித்து கூறியதாவது,இவர்கள் இருவரின் திருமணம் குறித்த செய்தி வந்ததும் ஆச்சரியமாக இருந்தது. இருவரும் அங்க சுத்துறாங்க, இங்க சுத்துறாங்க என்று எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காமல் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

அருண்பாண்டியனுக்கு சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு இருப்பதால், இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அருண்பாண்டியனின் சொந்த ஊரில் மிகவும் எளிமையான முறையில் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் நல்ல ஜோடி.


அருண்பாண்டியன் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, அவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. திருநெல்வேலி அருண்பாண்டியனின் பூர்வீக ஊராக இருந்தாலும் அவர் படித்தது வளர்ந்தது எல்லாமே இந்தியாவில் உள்ள பல முக்கிய ஊர்களில் தான். திருநெல்வேலியில் செட்டில் ஆன பிறகுதான் அவர் சினிமாவில் நடிக்கவே வந்தார். தற்போது அவரிடம் 200 கோடிக்கு மேல் சொத்துக்கு சொந்தக்காரர். தென்மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ள மனிதர்.

அதே போல அசோக் செல்வனும் சினிமா பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால், ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு சினிமாவில் நல்ல ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அண்மையில் வெளியான போர்த்தொழில் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அப்படி வளர்ந்து வரும் நடிகரை அருண்பாண்டியன் மருமகனாக ஏற்றுக்கொள்கிறார் என்றால், அது நிச்சயம் பாராட்டக்கூடியது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனுக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement