• Apr 28 2024

ஸ்வீடன் நாட்டில் இருந்து த்ரிஷா வெளியிட்ட போட்டோவை vijay- தான் எடுத்தாரா?-ஏழரையை கூட்டிய நெட்டிசன்கள்

stella / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.


விஜய் நடிப்பில் இவ்வாறு பிஸியாக இருந்தாலும் அடிக்கடி ல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார். அதாவது விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவைப் பிரிந்து வாழுவதாகவும் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் அடிக்கடி தகவல் வெளியாகியிருந்தது.ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி தான் என்றும் இருவரும் வெளிநாட்டில் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

மேலும் நேற்றைய திருமண நாளில் கூட சங்கீதா எந்த வொரு புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிராமல் இருந்தார். இதனால் இருவரும் பிரிந்து விட்டது உண்மை தான் போல என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.மேலும் விஜய் வெளிநாட்டில் த்ரிஷாவுடன் ஊர் சுற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.


இந்நிலையில்,   விஜய்யின் திருமண நாளன்று நடிகை த்ரிஷா ஸ்வீடன் நாட்டில் இருந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த போட்டோவை நிச்சயம் நடிகர் விஜய் தான் எடுத்திருப்பார் என்றே பதிவிட்டு ஏழரையை கூட்டி உள்ளனர். லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காகவது சங்கீதா வருகை தந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement