• May 20 2024

அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்தத் தருணம்... வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டப் போகும் சூர்யா... அதிரடியாக வெளிவந்த ப்ரோமோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் சூர்யாவிடம் ஏதாவது பிரச்சினையா எனக் கேட்கும் போது அதற்கு சூர்யா "அண்டைக்கு பார்க் இல் பார்த்த சாமியாரை இன்னும் 2,3 இடங்களில் பார்த்திருக்கோம், அவர் தான்டா இந்த தாலிக்கயிறைக் கொடுத்தாரு" எனக் கூறுகின்றார். 


அத்தோடு "நாளைக்கு தாண்டா அவர் சொன்ன அந்தப் பௌர்ணமி" எனவும் கூறுகின்றார். அதற்கு அவர் "அப்போ வெண்ணிலா கழுத்தில் தாலி கட்ட முடிவு பண்ணிட்டியா" எனவும் கேட்கின்றார்.  அந்தவகையில் ஏற்கெனவே அந்த சாமியார் பௌர்ணமி தினத்தன்று வெண்ணிலாவின் கழுத்தில் தாலி கட்டுமாறு சூர்யாவிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எனவே சூர்யா வெண்ணிலா கழுத்தில் தாலி கட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!   


Advertisement

Advertisement