இந்திய திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இவர் முன்பு வாரிசு போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகி வருகிறது.
மேலும், இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தனது Sri Venkateswara Creations நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். பெரிய அளவிலான தயாரிப்பாக உருவாகும் இப்படம், பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்ட காட்சிகள் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சல்மான் கான் – நயன்தாரா இணைப்பு மற்றும் வம்சி பைடிபல்லி இயக்கம் ஆகிய காரணங்களால் இந்த படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Listen News!