தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தான் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகம் காணப்படுகின்றது.
அந்த வகையில் இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் தான் பத்து தல. கன்னட சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த மப்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம். இப்படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தில்கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.
இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது.
இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் கவனம் செலுத்த உள்ளார் சிம்பு. இம்மாதம் 27 ஆம் தேதி மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற செய்திகள்:
- ஆஸ்கார் விருதினைப் பெற்ற பிரபல இசையமைப்பாளர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்
- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்
- கடுமையான ஒர்க் அவுட் செய்யும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா?-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
- தனுஷ் மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்- மதுரை தம்பதியினரால் ஏற்பட்ட பரபரப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!