• May 18 2024

“நான் சொன்னதைதான் இப்போது பிரதமரும் பிரதிபலிக்கிறார்”-நடிகர் கிச்சா சுதீப்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் கன்னட நடிகர் கிச்சா சுதீப், இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் பேன் இந்தியா திரைப்படங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இனி ஹிந்தி தேசிய மொழி இல்லை என்று பேசியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் “ஹிந்தி தேசிய மொழி இல்லை எனில் ஏன் உங்கள் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்.” என வாக்குவாதம் செய்யும் விதமாக கேட்டிருந்தார்.

இதற்கு கிச்சா சுதீப் ஒரு பக்கம் பதிலளிக்க, இணையத்தில் தென்னிந்திய ரசிகர்கள் அஜய் தேவ்கனைக் கடுமையாக விமர்சித்தும், அவரின் முட்டாள்தனமாக கருத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி”இந்திய மாநிலங்கள் அனைத்தின் மொழியும் நமது அடையாளம்தான். சமீபகாலமாக சிலர் மொழியை வைத்து பிரச்சனையக் கிளப்ப பார்க்கிறார்கள்” என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து பிரதமரின் இந்த கருத்தைப் பகிர்ந்துள்ள கிச்சா சுதீப் “நான் சொன்னதைதான் இப்போது பிரதமரும் பிரதிபலிக்கிறார்” என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement