• Sep 20 2024

36 ஆண்டுகளின் பின் நடந்த சம்பவம்-நதியாவே பகிர்ந்த விடயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தன் நடிப்புத்திறமையால் திரையுலகில் தனக்கென நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை நதியா.

1985-ம் ஆண்டு பூவே பூச்சுடவா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானர் .

இதன் பின்னர் உயிரே உனக்காக , நிலவே மலரே உள்ளிட்ட படங்களில் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினர் . இதைத்தொடர்ந்து ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட படங்கள் ஒரு திருப்பு முனையாக அமைந்தன.

திருமணத்தின் பின்னர் சினிமாவிலிருந்து விலகியிருந்த நடிகை நதியா 2004ம் ஆண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.

அதைத்தொடர்ந்து பல படங்களில் அம்மாவாக, ஆசானாக,முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார் .இந்நிலையில் 1986ம் ஆண்டு டாம் குரூஸ் நடித்த டாப்கன் என்ற படம் வெளியானது. 15 மில்லியன் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 357 மில்லியன் வசூல் செய்தது.

இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இப்படத்தை நடிகை நதியா ஒரு திரையரங்கில் பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது டாப்கன் படத்தின் முதல் பாகத்தை பார்த்தேன். இப்போது 36 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க வந்திருக்கிறேன். அதனால் முதல் பாகத்தை பார்த்த அந்த மலரும் நினைவுகள் தற்போது என் மனதில் தோன்றுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement