• Sep 23 2024

கோட் பட நடிகை மீது பாய்ந்த வழக்கு.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழ் சினிமாவில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படத்திலும் நடித்து இருப்பார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 413 கோடிகளை வசூலித்து இருப்பதாக அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகை பார்வதி மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட 7 பேர் தன்னை தாக்கி, கொடுமைப்படுத்தியதாக கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதன் காரணமாக பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement