• Sep 22 2024

இதுவரை யாரும் அசைக்க முடியாத உச்சத்தில் நம்ம ஆண்டவர்- குஷியில் படக்குழுவினர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் மிகவும் ஆக்டிவாக வித்தியாசமான ரோல்களில் நடித்து அதிகமான ரசிகர்களை தன்னகத்தே கொண்டவர் உலக நாயகன் கமல்ஹாசன்.

இவர் கடந்த நான்கு வருடங்களாக வேலைகள் காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. அவர் படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. இந்த நான்கு ஆண்டுகளில் பிற்பாடு புதிய படமான விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தை மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநரான லோகேஷ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஜூன் 3ஆம் திகதி வெளியாகி பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி. பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்திருந்தனர்.முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலான மொழிகளில் ஃபான் இந்தியத் திரைப்படமாக வெளியானது. அனைத்து மொழிகளிலும் கமல் டப் செய்துள்ளார்.படம் ரிலீஸான நாட்களிலேயே ரூபாய் 100, 200 கோடி என அதிரடி வசூலை எட்டியது. தற்போதும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது

இந்நிலையில்,திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்த நிலையில் 30 நாட்களில் சென்னையில் மட்டும் ரூபாய் 16.28 கோடிவரை வசூலித்ததாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement