நிதின் கக்கரின் ஜவானி ஜான்மேன் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஆலயா எஃப், பிரத்யேக நேர்காணலில், தனது ஃப்ரெடி திரைப்பட இணை நடிகர் கார்த்திக் ஆரியனை விரும்புவதாகவும், அவர் எவ்வளவு அன்பானவர் என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்தார். covid தொற்றுநோய் தாக்கியதை பற்றியும் மற்றும் அவர் வேலையை நிறுத்த வேண்டிய கட்டத்தில் இருந்ததை பற்றியும் பேசினார் .
திரைப்பட இயக்குனராக வர ஆசைப்பட்ட இவர் அந்த ஆசை நிறைவேறாமல் இறுதியாக ஒரு நடிகராக மாறினார் அதுமட்டுமல்லாது தனது டீன் ஏஜ் நாட்களிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் முற்றுமுழுதாக தான் மாறிய விதத்தையும் அதன் மூலம் தான் கற்றுக் கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார்.நேர்காணலின் போது, ஆலயாவிடம் கார்த்திக் ஆரியனுடன் பணிபுரிவது எப்படி இருந்தது என்று கேட்கப்பட்டது, அதற்கு ஆலயா கூறினார், “கார்த்திக்குடன் ஃப்ரெடி ஷூட்டிங் அருமையாக இருந்தது, அவர் உண்மையில் மிகவும் திறமையான பையன், அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும்.
பார்வையாளர்கள் எதை விரும்புகிறார்கள், அவருடைய விருப்பங்களும் முடிவுகளும் மிகவும் சரியாக இருக்கும் நபர்களில் அவரும் ஒருவர், அவரைப் போலவே அவர் வெற்றிகரமாக இருப்பதில் ஆச்சரியமில்லை என்று தனது கருத்தை சுவாரசியமாக பகிர்ந்திருந்தார் .
Listen News!