• Sep 20 2024

டிமான்ட்டி காலனி 3 பற்றி அதகள அப்டேட் கொடுத்த இயக்குநர்! என்ன விஷயம் தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் டிமான்டி காலனி 2. இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

2015 ஆம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி திரைப்படம் திகில் ஊட்டும் திரில்லர் நிறைந்த திரைப்படம். இந்த படத்தில் ரமேஷ் திலக், எம் .எஸ் பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தார்கள். ஒரே இரவில் வீட்டிற்கு நடக்கும் பேயின் அட்டகாசம் ரசிகர்களுக்கு பெரும் திகில் ஊட்டும் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம்  வெளியானது.

இந்த படத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கணவரை இழந்து வாடும் பெண்ணாக பிரியா பவானிசங்கரின்  நடிப்பு பட்டையை கிளப்பி இருந்தது. நாயகனை விடவும் இவருக்கு தான் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டு இருந்தது.


தற்போது இந்த படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்த நிலையில் மொத்தமாக 21 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தும் இருந்தார்கள்.

இந்த நிலையில், டிமான்டி காலனி படத்தின் மூன்றாவது பாகம் தொடர்பில் அஜய் ஞானமுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், இதன் இரண்டாவது பாகம் வெற்றி பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாகத்தை இயக்க உள்ளேன். அடுத்த வேறு ஒரு படத்தை இயக்கி விட்டு மீண்டும் டிமான்டி காலனி 3 படத்தை இயக்க உள்ளேன். அது 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement