• May 20 2024

குழந்தையை பறிகொடுத்த நடிகர் படவா கோபி யாருக்கும் தெரியாமல் செய்யும் செயல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் படவா கோபி.இவர் மிகச்சிறந்த மேடை நகைச்சுவை கலைஞரும் ஆவார்.இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பொய் திரைப்படத்தின் மூலம் தான் படவா கோபி சினிமா விற்குள் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அத்தோடு, இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல குரல் இசை கலைஞர், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொழில்முறை வீரர்களுக்காக பணியாற்றுவதற்கு முன்பு ஆரம்பத்தில் பிரபலங்கள் பங்குபெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படவா கோபியை விஜய் டிவி நிகழ்ச்சியில் அடிக்கடி பார்க்கலாம். இவர் தனது மனைவி ஹரிதாவுடன் விஜய் டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 1, மிஸ்டர் & மிஸ்ஸஸ், நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மிமிக்ரி மன்னனான படவா கோபி, தோனி போல் பேசி காட்டுவதில் வல்லவர். இவரை முதன் முதலில் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தவர் மறைந்த இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். தொடர்ந்து காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக சினிமாவில் கலக்கி வருகிறார் கோபி. மேலும் இது தவிர இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் படவா கோபி - ஹரிதாவின் செல்ல மகள் கடந்த 2007ஆம் ஆண்டு மறைந்தார். மேலும் 5 வயதில் மகளின் இறப்பு இருவரையும் புரட்டி போட்டது. மீளா துயரத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டனர். ஆனாலும் அவர்களால் தங்களின் செல்ல மகளை மறக்க முடியவில்லை. மேலும் இந்த விஷயம் சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் தெரியும். அதுமட்டுமில்லை, ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கோபி இதை வருத்ததுடன் பகிர்ந்து இருக்கிறார்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்னர் கோபியும் ஹரிதாவும் செய்து வரும் உன்னதமான சேவை பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் மறைந்த தங்களது குழந்தையின் நினைவாக ட்ரஸ்ட் ஒன்று தொடங்கி அதன் மூலம் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

மேலும் அவர்களான செலவை இவர்கள் பார்த்து கொள்கிறார்கள். இவர்களின் இந்த உன்னதமான சேவை நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகின்றது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த தகவல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பலருக்கும் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் மனதார பாராட்டி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement