• May 19 2024

ரஜனி ,விஷால் பட பாட்டி இறந்துவிட்டாரா? youtube இல் வெளியான செய்தியால் ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையான குள்ளப்புள்ளி லீலா ரஜனியின் முத்து படம் மூலம் அறிமுகமானவர்.அரண்மனை 3, அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

அத்தோடு விஷாலின் மருது படத்தில் அவரது பாட்டியாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியவர்.கேரளாவை சேர்ந்த அவர் எக்கச்சக்க மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

மேலும் குள்ளப்புள்ளி லீலா சமீபத்தில் இறந்துவிட்டார் என youtubeல் செய்தி பரவியது. அதை பார்த்து பலரும் அதிர்ச்சி ஆனார்கள். ஆனால் அந்த செய்தி லீலாவுக்கே சென்றபோது கடும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார். காரணம் அவர் உயிரோடு இருக்கும்போதே யாரோ வதந்தி பரப்பி இருக்கிறார்களாம்.

இந்நிலையில் இந்த வதந்தி குறித்து நடிகை குள்ளப்புள்ளி லீலா தெரிவித்திருப்பதாவது…, `

`இதுபோன்ற தவறானச் செய்திகளைத் தயவு செய்து பரப்ப வேண்டாம். இந்த யூடியூப் செய்தியைக் கேட்டு, தெரிந்தவர்கள், உறவினர்கள் என ஏராளமானவர்கள் போன் செய்து விசாரித்தார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூப் சேனல் நடத்தும் பலர் லைக்ஸ் மற்றும் ஷேரிங்கிற்காக தவறான தகவல்களைத் தருகிறார்கள். அதன்மூலம் அவர்களுக்குப் பணம் வருகிறது என்பது எனக்குத் தெரியும். அதற்காக உயிருடன் இருப்பவர்களைக் கொன்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?. என்னைப் பற்றிய செய்தியை அரை மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement