• Sep 21 2024

பத்து விருதுகள் பத்தாது-இயக்குநர் பார்த்திபன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியளவில் வெளியான சிறந்த படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் இதில் ஐந்து விருதுகள் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கும் இரண்டு விருதுகள் மண்டேலா திரைப்படத்திற்கும் மூன்று விருதுகள் சிவரஞ்சினியும் சில பெண்களும் திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வாறுஇருக்கையில் பத்து விருதுகள் பத்தாது என்றும் அடுத்த வருடம் இன்னும் அதிக விருதுகள் தமிழ் திரை உலகிற்கு வேண்டும் என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது….

எனக்குத் தெரியும் !
என்ன பாடாய்படுத்தும் இவ்விருதுகள் என…
அவ்வுவகையுடன் வாழ்த்துகிறேன்
சூரரைப் போற்று
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
மண்டேலா
பத்தாம்!
பத்தாது - இன்னும் வேண்டும் அடுத்த வருடத்தில்!

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement