• May 20 2024

தேசிய விருது கிடைத்தது சூர்யாவுக்கு தெரியாதா?- சுதா கொங்கரா சொன்ன சுவாரஸ்யமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் சூரரைப் போற்று.இத்திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்ததோடு சூர்யாவின் 2டி நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது.

கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக இந்த படம் உருவாகியதோடு கொரோனா தொற்று காலத்தில் ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ததற்காக கடும் எதிர்ப்புக்கள் கிளம்பின.

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சூரரைப் போற்று படம் முக்கிய பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இந்த படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சூர்யா மற்றும் சூரரைப் போற்று டீமுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுதா கொங்கரா தனது பேட்டியில் சுவாரஸ்ய தகவல் ஒன்றை சொல்லி உள்ளார்.சூரரைப் போற்று படத்திற்காக தேசிய விருது கிடைத்தது தொடர்பாக சுதா கொங்கராவிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில், விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் மாறன் (சூர்யா) அமெரிக்காவில் இருந்தார். அந்த சமயத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அதனால் 3- 4 மணி நேரம் தாமதமாக தான் அவருக்கு விருது கிடைத்த தகவல் பற்றி தெரிவித்தேன். ஜோதிகாவிற்கு கால் பண்ணி சொன்ன போது, அவர் உற்சாகமாகி, இங்கு என்ன நடந்திருக்கு பார் என சொன்னார்.

என்னது…5 விருதா? என்ன நடக்குது இங்க? என இப்போது வரை அவர் நம்ப முடியாத ஆச்சரியத்தில், அதிர்ச்சியில் தான் உள்ளார். இன்று காலை கூட அவரது பிறந்தநாள் என்பதால் கால் பண்ணி வாழ்த்து சொன்னேன். எனக்கு தெரிந்து இந்த பிறந்தநாள் அவருக்கு இதுவரை எப்போது இல்லாத, மறக்க முடியாத ஸ்பெஷல் பிறந்தநாளாக இருக்கும் என்றார்.

இதைக் கேட்ட ரசிகர்கள், அப்படியானால் தற்போது சூர்யா அமெரிக்காவில் தான் இருக்கிறாரா. பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாட குடும்பத்துடன் சென்றுள்ளாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement