• May 04 2024

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு சூப்பரான குட் நியூஸ்-கோபி சீரியலை விட்டு விலகவில்லையாம்- காரணம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

முயற்சி என்பது இருந்தால், ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் அதற்கு வயது, குடும்பம் எல்லாம் ஒரு தடையே இல்லை என்கிற கருத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாக்கிய லட்சுமி'. 1000 எபிசோடுகளை கடந்து, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த சீரியல், முதல் முதலில் மராத்தி மொழியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டார் பரிவார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த சீரியல் மலையாளத்தில், ஏசியாநெட் தொலைக்காட்சியிலும் ரீமேக் செய்து ஒளிபரப்பானது.பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் தமிழில் ஆரம்பிக்கப்பட்டது.


இந்த சீரியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது கோபியின் கதாபாத்திரம் தான்.இந்த நிலையில் கோபி அண்மையில் சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது.


இப்படியான நிலையில் கோபி பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகவில்லையாம். ரசிகர்கள் நீங்கள் தான் சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்ததால் கோபி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் இந்த சீரியலில் இருந்து விலகவில்லையாம். அவர் தான் தொடர்ந்து சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement