• Sep 21 2024

திடீரென வளைக்காப்பை நிறுத்திய சோனம் கபூர்; வெளியானது காரணமாம்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் திடீரென வளைக்காப்பை நிறுத்தியதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் நடிகை சோனம் கபூர். இந்நிலையில் நேற்று சோனம் கபூரின் வளைக்காப்பு நிகழ்ச்சி மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள சோனம் கபூரின் அத்தை கவிதாவின் வீட்டில் நடைபெறுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆடம்பரமான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் திடீரென வளைக்காப்பு நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடிகை சோனம் கபூர் தனது இல்லத்தில் ஒரு சிறிய கெட் டுகெதருக்கு ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் சோனம் கபூரின் வளைக்காப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் சோனம் கபூர் வளைக்காப்பை ரத்து செய்தது தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் அவருடைய பிரசவம் தேதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement