• Sep 19 2024

மூன்று பாகங்களில் உருவாகும் ஷங்கரின் அடுத்த படம்.. ஹீரோ யார்? பட்ஜெட் எத்தனை கோடி?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாக பேட்டி ஒன்றில் அவரே அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை அவ்வப்போது கூறி வந்தார் என்பதும் சரித்திர கதை அல்லது சயின்ஸ் ஃபிக்ஷன் படம் தான் தன்னுடைய அடுத்த படமாக இருக்கும் என்றும் அதில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் கூறியிருந்தார்.



இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் ஷங்கர், ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக கூறியுள்ளார். கொரோனா காலத்தில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலை படித்ததாகவும் அந்த நாவல் தனக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனே திரைக்கதை எழுதி முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் . ‘வேள்பாரி’ படத்தை மூன்று பாகங்களாக எடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் நடிகர்கள் குறித்த இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூன்று பாகங்களின் பட்ஜெட் சுமார் ரூ.500 கோடி என கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘வேள்பாரி’ நாவலை சூர்யா படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் ஷங்கர் மற்றும் சூர்யா இணைவுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement