• Apr 28 2024

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து... அதிரடியாக வழங்கப்படவுள்ள பாதுகாப்பு நடவடிக்கை..!

Prema / 6 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் பாட்ஷாவாக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகி வசூலைக் குவிந்திருந்தது. 


இதனைத் தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் உருவாகி வரும் 'டங்கி' திரைப்படம் டிசம்பர் மாதம் 22-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதனையடுத்து ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு நடிகர் ஷாருக்கானும் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ஷாருக்கானுக்கு Yபிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது. அதாவது ஆறு துப்பாக்கி ஏந்திய போலீஸ் கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் எனவும், அவர் எந்த இடத்திற்கு சென்றாலும் குறித்த ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.


மேலும் ஷாருக்கானின் பதான், ஜவான் ஆகிய இரண்டுபடங்களின் வெற்றியை அடுத்தே ஷாருக்கானின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement