• May 05 2024

"சங்கீதாவுக்கு வேறு எதுவுமே தெரியாது"…மருமகள் பற்றிப் பேசிய மாமியார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தலைசிறந்த முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி நடிப்பையும் தாண்டி தன்னுடைய குணத்தினால் இன்று ஒவ்வொரு வீட்டினதும் நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்தளவிற்கு பெருந்தன்மை அற்ற ஒருவராக இருந்து வருகின்றார். அதுமட்டுமன்றி தன்னலம் கருதாத ஒரு பொதுநலவாதியாகவும் இருந்து வருகின்றார்.

இவர் சினிமாப் பின்னணியை கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் பல்வேறு கஷ்டங்கள், வலிகள், அவமானங்கள், தோல்விகள் எனப் பலவற்றையும் கடந்து தான் வெற்றிகரமான நட்சத்திர நாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பையும் தாண்டி நடனத்திற்கும் பேர் போன ஒருவர். குறிப்பாக இன்று இவருக்கென தமிழ்நாட்டையும் தாண்டி உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவுக்கு திரையுலக சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார் விஜய்.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமே. அதே போன்று விஜய்யின் தாயார் ஷோபாவும் சிறந்த ஒரு பாடகியாக சினிமாவில் கலக்கியவர் ஆவார். அதுமட்டுமன்றி இவர் விஜய்யுடன் சேர்ந்தே ஒரு சில பாடல்களை பாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் சங்கீதா என்பவரை நெடு நாட்களாக காதலித்து வந்த நிலையில் 1999-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவரின் மனைவி எந்தவிதமான சினிமாப்பின்புலமும் இல்லாதவர். இந்த நிலையில் இத்தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். விஜய்யின் மகன் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடனமாடியிருந்தார். அதேபோன்று மகள் திவ்யா சாஷாவும் 'தெறி' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தனர்.

இவ்வாறாக நம்ம தளபதி விஜய்யின் குடும்பத்தினர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தலைகாட்டி விட்டனர். ஆனால் விஜய்யின் மனைவி சங்கீதா மட்டும் இதுவரை சினிமா பக்கம் வந்ததே கிடையாது. இந்நிலையில் தனது மருமகள் சங்கீதா பற்றி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் சங்கீதா பற்றிய பல விடயங்களை போட்டுடைத்திருக்கின்றார். அதாவது “நானும் சங்கீதாவும் மாமியார், மருமகள்னு சொல்றதைவிட நல்ல ஃப்ரெண்ட்ஸ் என்று தான் சொல்லனும். வீட்டையும், குழந்தைகளையும் நல்ல முறையில் கவனித்துக் கொள்வதில் சங்கீதாவைப் போல் யாரையும் பார்க்க முடியாது. அந்தளவிற்கு சிறந்த ஒரு பெண் சங்கீதா" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் அவர் கூறுகையில் "வீடு, குழந்தைகள் இதைத்தாண்டி சங்கீதாவுக்கு வேறு எதுவும் தெரியாது. எனக்கும் எனது கணவருக்கும் நல்ல மருமகள். என்னுடைய பேரனுக்கும், பேர்த்திக்கும் என்மீது அலாதி பிரியம். ரெண்டு பேருமே ரொம்ப அமைதியானவங்க. பேசும்போதுகூட அமைதியா தான் பேசிப்பாங்க. அதைப் பார்க்குறப்போ ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்” எனவும் கூறியிருக்கின்றார்.

ஷோபா சந்திரசேகர் தனது மருமகள் பற்றி இவ்வாறு புகழந்து பேசியிருப்பது, காலம் கடந்திருப்பினும் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement