• Apr 28 2024

சமந்தா-நாகசைதன்யா புகைப்படத்தை இட்டு சமந்தாவின் அப்பா போட்ட பதிவு-ஓ...இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமந்தா மற்றும் நாக சைதன்யா பல வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென கடந்த வருடம் விவகாரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பிறகு சமந்தா மீது தப்பா? நாக சைதன்யா இன்னொரு பெண்ணை காதலிக்கிறாரா? என ஏகப்பட்ட வதந்திகள் பரவியது.

ஆனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இருவருமே அடுத்ததாக யாருடனும் டேட்டிங் செல்வது போல எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.



மேலும் இருவரும் தொடர்ந்து தனியாகவே தங்களது சினிமா பயணத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். மனைவி சமந்தா பாலிவுட்டில் சாதித்த நிலையில், தானும் பாலிவுட்டில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என அமீர் கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நாக சைதன்யா.

இந்நிலையில் சமந்தாவின் அப்பா ஜோசப் பிரபு முகநூலில் போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.



"நீண்ட காலத்திற்கு முன்பு; ஒரு கதை இருந்தது; அது தற்போது இல்லை!! அதனால் நாம் புது கதையை, அத்தியாயத்தை தொடங்கலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

சமந்தா திருமண போட்டோக்களை வைத்து அவர் போட்டிருக்கும் அந்த பதிவை நாக சைதன்யா ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.  

Advertisement

Advertisement

Advertisement