• Apr 30 2024

வன்முறை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய சாய்பல்லவி- என்னம்மா இப்பிடி பண்ணிடிங்களேம்மா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலர் டீச்சர் என்று ரசிகர்களிடத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி.அந்தவகையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான பிரேமம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு பின்னர் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.தற்போது இவர் கார்கி, மாவீரன் ஆகிய படங்கள் கை வசம் வைத்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை சாய் பல்லவி,

இந்த நிலையில் அண்மையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இந்தியாவில் நடக்கும் கொலைகளைப் பற்றி அவர் பேசியுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .

அவர் சொன்ன கருத்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிகள் கொல்லப்படுவதும் இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய்ஸ்ரீராம் என சொல்லி தாக்குதல் நடத்தி அவரைக் கொன்றதும் ஒன்றுதான்.இரண்டுமே மிகவும் தவறான செயல் .

மதத்தின் பெயரால் எந்தவொரு உயிரும் போகக் கூடாது என்கின்ற கருத்தை முன்னிறுத்தி நடிகை சாய் பல்லவி மிக தைரியமாக பேசி உள்ளார் இந்த விஷயம் தற்போது டிரெண்ட் ஆகி வருகின்றது. சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அதற்கு எதிர்ப்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement