• May 01 2024

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் மீண்டும் வெடித்த புதிய பிரச்சினை-விசாரணைகள் விரைவில் ஆரம்பம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடியாக விளங்கிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த ஜுன் மாதம் 9ம் திகதி மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தில் பிரபலங்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த அடுத்தநாளே இருவரும் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் என்பன வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து அடுத்த நாளே இருவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

மேலும் நேற்றைய தினம் நயன்தாரா தனது பூர்வீக வீட்டுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறாக திருமணத்திற்குப் பின்னர் இருவரும் பிஸியான ஜோடியாகவும் வலம் வருகின்றனர்.

இது தவிர திருமணம் முடிந்த நாளிலிருந்து இருவரும் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் நடந்த கடற்கரை பொது இடம் என்பதால் திருமண நாளன்று அங்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை தேசிய மனித ஆணையம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement