• May 02 2024

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமெல்லா தற்கொலைக்கு இதுதான் காரணமா?- கவலையில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கானாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரதியூஷா கரிமெல்லா வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மக்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹீரோயின்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் பிரதியூஷா, இவர் தென்னிந்தியாவிலுள்ள தீபிகா படுகோன், கீர்த்திசுரேஷ், ஸ்ருதிஹாசன்,தமன்னா, காஜல்அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து வருகின்றார்.

இந்நிலையில் பிரதியூஷா கெரில்லா தற்கொலை செய்துகொண்ட பரபரப்பு உண்மைகள் வெளியாகி வருகின்றன. வடிவமைப்பாளர் பிரதியுஷா தனது பூட்டிக்கில் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றும் நச்சு வாயுவால் இம்மாதம் 10ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் சந்தேகம் இடத்திற்கான முறையே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேஷன் டிசைனர் பிரதியூஷா கரிமெல்லாக்கு இன்னும் திருமணமாகவில்லை மற்றும் தொழிலில் எதிர்பார்த்த அளவை எட்ட முடியவில்லை என்று மனவேதனை அவரை முடக்கியுள்ளது. ஆனால் சமீபகாலமாக காதல் தோல்விதான் தற்கொலைக்கு காரணம் என பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

தனிமை தாங்க முடியாமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதியூஷா எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மற்றும் அவரது வாட்ச்மேன் வீரபாபு அளித்த விவரங்களை கணக்கில்கொண்டு ஆதாரங்களை திரட்டி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிரதியூஷாவின் உடலை போலீசார் மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். இந்நிலையில் அவரது தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement