• May 20 2024

ரம்யா பாண்டியனின் கவர்ச்சிக்கு கிடைத்த பலன்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகில் 'டம்மி டப்பாசு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்திற்கு அடுத்த படியாக 2016-ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் உருவான 'ஜோக்கர்' திரைப்படத்திலும் சிறப்பான ஒரு தோற்றத்தில் நடித்திருக்கின்றார்.

எனினும் இப்படங்கள் எதுவும் இவரை சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததோடு எதிர்மறையான பல விமர்சனங்களையும் பெற்றிருந்தார்.

அதுமட்டுமல்லாது பிக்பாஸ் சீசன் 4 இலும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கின்றார். அங்கும் 'விஷபாட்டில் ரம்யா பாண்டியன்' என அழைக்கும் அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றிருக்கின்றார். அத்தோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கின்றார்.

இவ்வாறாக தொலைக்காட்சியில் இடம்பெற்ற ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக பல ரசிகர்களை சம்பாதித்து இருக்கின்றார். எனினும் இவரிற்கு தமிழில் பட வாய்ப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பல கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அவற்றை இணையத்தில் பதிவிட்டு வந்திருந்தார். இவரின் கவர்ச்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது மலையாள சினிமாவில் கால் பாதிக்கும் வாய்ப்பு ஒன்று இவருக்கு தற்போது கிடைத்துள்ளது. 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற மம்முட்டி நடிக்கும் படத்தின் மூலமாகவே மலையாள சினிமாவில் அறிமுகமாகின்றார். மேலும் இவர் வேற்று மொழி படத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement