• May 19 2024

எத்தனை கோடி கொடுத்தாலும் விஜய்க்கு ஆலோசகராக இருக்க மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

எத்தனை கோடி கொடுத்தாலும் விஜய்க்கு அரசியல் ஆலோசகராக இருக்க மாட்டேன் என இந்தியாவின் முன்னணி அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 காங்கிரஸ், பாஜக, திமுக உள்பட முன்னணி கட்சிகள் ஆட்சியில் அமர்வதற்கு காரணமாக இருந்தவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என்பதும் குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அவர் தான் ஆலோசனை கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் சில முக்கிய காட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு அவர் ஆலோசகராக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.



இதுகுறித்து விஜய் தரப்பினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த பிரசாந்த் கிஷோர், ‘எத்தனை கோடி கொடுத்தாலும் விஜய்க்கு ஆலோசகராக இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

விஜய் என்னிடம் நேரில் வந்து ஆலோசகராக இருக்க வேண்டும் என்று விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக இருக்க எனக்கு எண்ணம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர் எனக்கு மதிப்பு கொடுத்து நேரில் வந்தால் சில அறிவுரைகள் மட்டும் கொடுப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஜய் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக இருக்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement