• Jun 05 2025

பண மோசடியில் சிக்கிய பிரபல இயக்குநர் ...!பொலிஸார் எடுத்த நடவடிக்கை...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்படங்களில்  நடன இயக்குநர் பணியாற்றியவர் தினேஷ் குமார் . இவர் பல திரைப்படங்களிலும் நடித்தும் உள்ளார். தற்போது 35 லட்ஷம் பணமோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  


இவர் ஆடுகளம்,போக்கிரி, ஈசன், இறுதிச் சுற்று எனப்  பல படங்களில் நடன இயக்குநராக பணி புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும்  பல திரைப்படங்களில் துனை வேடங்களிலும்,ஹீரோவாகமும் நடித்துள்ளார். தற்போது இவர் குறித்தது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 


மேலும் இவர் நடன சங்க இயக்குநர் மற்றும் கலைஞர்கள் சங்க தலைவராக தினேஷ் பணியாற்றி வந்துள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "திரைப்படத்தில் நடனம் ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாமையும் ,35 லட்சம் ரூபா பண மோசடி செய்துள்ளதாகவும்,நடன இயக்குநர் கௌரி சங்கர் மீது தாக்குதல் நடத்தியாகவும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில் தன் மீது தவறு இருப்பதாக கூறி தினேஷ் பதவி விலக கூறி இருந்தார். இதற்கமைய அவசர  கூட்டதின் போது பதவி விலக மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். 

 

Advertisement

Advertisement