• Sep 21 2024

எபிசோடு முழுக்க ஒரே ஷாட்டா?- ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலால் கடுப்பான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன்2. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியல் ஆரம்பம் முதலே கதையில் ஏகப்பட்ட ட்விஸ்டுகளை வைத்து சுவாரஸியமாக ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த தொடரில் திரவியம் ராஜகுமாரன், கேப்ரியலா சார்ல்டன், சித்தார்த் குமரன், சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அண்ணனின் கல்யாணத்தில் பெண் காணமல் போக, கடைசியில் தம்பி காதலித்தை பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார். அதுமட்டும் இல்லாமல், அண்ணன் கல்யாணம் செய்ய இருந்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார். அப்படி மாறி மாறி திருமணம் நடக்கிறது.

சரி நடந்தது நடந்து போச்சு, இனி அடுத்து என்ன என யோசித்து ஜோடிகளும் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். பிரியாவும் ஜீவாவும் நெருக்கமாகி வருகின்றனர். ஆனால் பார்த்தி காவ்யா விஷயத்தில் அது அப்படியே தலைகீழாக மாறிவிடுகிறது. காவ்யாவின் மனதில் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என பார்த்திபன் பல வேலைகளை பார்த்து வருகிறார்.

இந்நிலையில்,நேற்றை எபிசோடில், காவ்யா போனில் சாப்பாட்டை ஆர்டர் செய்து காத்திருக்கிறார். இதைதெரிந்து கொண்ட பார்த்திபன் வீட்டுக்கு வந்த டெலிவரிபாயிடம் சாப்பாட்டை வாங்கி வைத்துக்கொண்டு காவ்யாவிடம் சாப்டீயா என கேட்க அவர், ஆர்டர் செய்திருக்கிறேன் வந்துவிடும் என கூறுகிறார். இப்போவே நேரம் ஆகிவிட்டது இதுக்கு மேல் டெலிவரிபாய் வந்து நீ எப்போ சாப்பிடுவா, நான் மீன், சிக்கன் எல்லாம் சமைத்து இருக்கிறேன் என்னுடன் சாப்பிடவா என்கிறார். காவியாவும் சோறுதான் முக்கியம் என சாப்பிடுகிறார்.

இந்த ஒரே காட்சியைவைத்துக் கொண்டு நேற்றை முழு எபிசோடையும் ஓட்டிவிட்டார்கள். காவியா சாப்பிட போலாமா வேண்டாமா என மனதிற்குள் பேசுவதும், பார்த்திபன் எப்படியும் நீ வந்து தானே ஆகனும்னு என மனதிற்குள் பேசுவது செயற்கைத்தனமாகவே இருக்கிறது.

எப்படியாவது இந்த முழு எபிசோடையும் இந்த சாப்பாட்டு காட்சியோடு முடித்துவிட வேண்டும் என பிளான் போட்ட இயக்குநர் அதை கச்சிதமாகவே செய்துள்ளனர். ஆனால், இதைபார்க்கும் நமக்குத்தான் என்னடா இதெல்லாம் என கடுப்பாக இருக்கிறது. சீரியல் இயக்குநர்கள் இன்னும் கொஞ்சம் பெட்டரா யோசித்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement