• Sep 16 2024

ஆண் உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி அணு அணுவாக ரசிகனை கொன்ற நடிகர்! வேடிக்கை பார்த்த நடிகை...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் கொல்லப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், நெஞ்சு எலும்பு உடைக்கப்பட்டு, உடல் முழுவதும் 31 இடத்தில் பலத்த காயம் என பிரபல நடிகரின் ரசிகர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் மகனும் இருக்கும் நிலையில், அவரைவிட்டு பிரிந்து பவித்ரா கவுடாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகசாமி என்கிற இளைஞர் மோசமாக கமெண்ட் செய்தது மட்டுமில்லாமல், ஆபாசமான போட்டோக்களை அனுப்பி உள்ளார். இந்த நேரத்தில், ரேணுகா சுவாமி காமாஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


இதனையடுத்து, போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இந்த வழக்கில் நான்கு பேர் தானாக ஆஜராகி, பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறினர் ஆனால், ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததை அடுத்து போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியதில், கன்னட நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

குற்றப்பத்திரிக்கை இந்நிலையில், ரேணுகா சுவாமி கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிக்கை வெளியாகி உள்ளது அதில் ரேணுகா சுவாமி ஜூன் 8 கடத்தப்பட்ட போது, பவித்ரா அவரை காலணியால் மிதித்து துன்புறுத்தி உள்ளார். இதற்கு ஆதாரமாக பவித்ராவின் செருப்பில ரேணுகா சுவாமியின் ரத்தக்கரை படிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், நக கருவியை பயன்படுத்தி ரேணுகா சுவாமியின் ஆண் உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி.

விதைப்பைகளை அடித்து சிதைத்து. பல கொடுமைகளை செய்து ரேணுகா சுவாமியை கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூரமான சம்பவம் அனைத்தும் நடிகை பவித்ராவின் கண்முன்னே நடந்துள்ளது. இந்த விடையம் தன தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 



Advertisement

Advertisement