• Apr 28 2024

சினேகா-பிரசன்னா தம்பதியினரை பாராட்டும் நெட்டிசன்கள்... அதுவும் மகன் விஷயத்திலா... அப்படி என்ன தான் செய்துள்ளனர்..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் என்று கூறுமளவிற்குப் பல பிரபலங்கள் உள்ளனர். அதில் ஒரு சிலரை மட்டுமே மக்கள் முக்கியமாக நினைவில் வைத்திருப்பார்கள். குறிப்பாக சொல்லப்போனால் மக்கள் மனதில் தோன்றும் முதல் ஜோடி சூர்யா ஜோதிகா தான். அவர்களுக்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விருப்பப்படும் ஜோடியாக இருப்பது சினேகா-பிரசன்னா தம்பதியினர். 


தமிழில் ஒரு சில படங்களில் இணைந்து நடித்த சினேகா-பிரசன்னா ஜோடி காதலில் விழுந்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறி உள்ளனர். திருமணத்தைத் தொடர்ந்து அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார் சினேகா. பிறகு தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் மட்டும் சினேகா தலையை காண்பித்து உள்ளார். அதே சமயம் நடிகர் பிரசன்னாவிற்கு அதிகமான படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அவர் கதாநாயகனாக நடித்து 'கல்யாண சமையல் சாதம்' எனும் ஒரு திரை படம் மட்டும் வெளிவந்து ஹிட் அடித்தது.

குடும்ப வாழ்க்கையில் இணைந்த சினேகா பிரசன்னா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதலாவதாக ஒரு ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையும் உண்டு. அதாவது 2020 இல் ஜனவரி மாதத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் சினேகா சில காலம் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார். அதன் பின் உடல் எடையை தற்போது குறைந்திருக்கும் அவர் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார். 


இந்நிலையில் சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன் விஹான் தற்போது பள்ளி செல்கிறார். அவரை சென்னையில் பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளியில் எல்லாம் சேர்க்கவில்லையாம். அனைத்து தரப்பு மக்களும் தமது குழந்தைகளை சேர்க்கும் ஒரு சாதாரண பள்ளியில் தான் சேர்த்து இருப்பதாக பிரசன்னா சமீபத்தில் இடம்பெற்ற ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.  

பிள்ளையை அந்த ஸ்கூலில் சேர்த்தேன், இந்த ஸ்கூலில் சேர்த்தேன் என்று புகழ்ந்து கொண்டு திரியும் பிரபலங்களுக்கு மத்தியில் இத்தம்பதியினர் தமது மகனை சாதாரண பள்ளியில் சேர்த்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது இவர்களின் செயலை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement