சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் நேற்றைய எபிசோட்டில் அரசு மற்றும் அருண் என இருவரும் குணசேகரன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் சொத்தில் ஐந்து பங்கில் ஆதிரை பங்கை எழுதிக் கொடுக்கும்படி சொல்ல குணசேகரன் அதிர்ச்சி அடையும் வகையில் அமைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அப்பத்தா எஸ்.கே.ஆர்-ஐ நேரில் சந்தித்து "உங்க தம்பி இங்க நடந்தது பற்றி எல்லாத்தையும் உங்ககிட்ட சொன்னாங்களா என்று தெரியல ஆனால் நான் சொல்கிறேன்" எனக் கூறி நடந்தது எல்லாவற்றையும் கூறுகின்றார்.
இதனைத் தொடர்ந்து மறுபக்கத்தில் குணசேகரன் "அவங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் எழுதி கொடுத்து எல்லாம் இந்த கல்யாணத்தை நடத்த முடியாது" என சொல்கின்றார். அதற்கு ஆதிரை "அப்படி கொடுத்தால்தான் என்ன" என கேட்க உடனே கதிர் அவளை அடிக்க பாய்கிறார்.
இதனையடுத்து ரேணுகா "டேய் என்னடா" என கோபத்தில் கதிரை எதிர்த்து சண்டையிடுகிறார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ ஆனது பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் வெளிவந்திருக்கின்றது.
Listen News!