• May 20 2024

கண்ணன் வீட்டுக்குச் சென்று பளார் என்று அறைவிட்ட மூர்த்தி- கதறி அழுத ஐஸ்வர்யா- அதிர்ச்சியில் உறைந்த மீனா

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணன் வீட்டுக்குப் போவதற்காக மூர்த்தி தனம் முல்லை கதிர் ஆகியோர் கிளம்புகின்றனர். முதல்ல் போவதற்கு மறுப்பு தெரிவித்த மூர்த்தி பின்னர் தானும் போகின்றேன் என்று கிளம்புகின்றார். அந்த நேரம் போலீஸ் வந்து கதிரை கைது செய்யப் போவதாக சொல்ல அதிர்ச்சியடைகின்றனர். பாங்க் ஆபிஸரை அடிச்சதால் தான் அரெட்ஸ் பண்ணிவதாக சொல்கின்றனர்.


இதனால் முல்லை என்ன நடந்தது என்று தெரியாமல் கதறுகின்றார். பின்னர் கதிரை வைத்திருக்கும் போலீஸ் ஸ்டேசனுக்கு முல்லை சென்று என்ன நடந்தது என்று விசாரிக்கின்றார். அப்போது கண்ணன்  கடனுக்காக தான் கதிர் அடித்ததை அறிந்த மூர்த்தி அதிர்ச்சியடைந்ததோடு நேரடியாக கண்ணன் வீட்டுக்குச் செல்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க வளைகாப்புக்காக ஐஸ்வர்யாவும் கண்ணனும் ரெடியாகி இருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகின்றார். மீனா வந்து கண்ணனின் முகத்தைப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்க கண்ணன் கீழே விழுந்து விட்டதாக சொல்லி சமாளிக்கின்றார். இந்த நேரம் பார்த்து உள்ளே வரும் மூர்த்தி கண்ணனின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடுகின்றார்.


கண்ணனை ஏன் அடிச்சீங்க என்று ஐஸ்வர்யா கேட்க வர அவரையும் கோபமாகத் திட்டுகின்றார். பின்னர் கதிரை போலீஸ் பிடிச்சிட்டு போன விஷயத்தையும் கொலை முயற்சி கேஷில் போட்டிருக்கும் விடயத்தையும் சொல்லி திட்டி விட்டுப் போகின்றார்.இதைக் கேட்ட மீனாவும் அதிர்ச்சியடைகின்றார். கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் அழுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement