• May 09 2024

அதைப் பற்றி நான் பிறகு சொல்கிறேன்... 2-ஆவது திருமணத்தில் அந்த விஷயத்தை கூறாது மழுப்பிய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழில் பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும், அதனோடு இணைந்து `Ashish Vidyarthi actor vlogs' என்ற யூ ட்யூப் சேனல் ஒன்றையும் நடாத்தி வருகின்றார். இதில் 1.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். 


மேலும் தற்போது இவர் ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார். அதில் ஒரு சில படங்கள் வெளியாவதற்கு தாயாராக உள்ளன. நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி ஏற்கனவே ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது நடிகை சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 23 வயதுடைய ஆர்த் வித்யார்த்தி என்ற ஒரு மகனும் உள்ளார். 


இருப்பினும் இவர்களுக்குள் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக, இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனைத் நேற்றைய தினம் அஸ்ஸாம் மாநிலத்தி்ன் கவுஹாத்தியை சேர்ந்த தொழில் முனைவோரான ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். 50 வயதான இவர் கொல்கத்தாவில் உள்ள 'NAMEG' என்ற ஹேன்ட் மேட் பேஷன் டிசைனிங் கடையை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இத்திருமணம் குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி கூறுகையில் "நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது, ஒரு நீண்ட கதை. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன். எனது வாழ்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்திருப்பது சிறந்த உணர்வைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து, மாலையில் எங்கள் குடும்பத்தினருடன் விருந்து நிகழ்வு நடைபெற்றது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவரின் மனைவி ரூபாலி பருவா பேசுகையில் "நாங்கள் சில காலத்திற்கு முன்பு சந்தித்துக் கொண்டோம். மேலும், இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தோம். எங்கள் திருமணம் ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவருமே விரும்பினோம்" என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement